search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் அணி"

    • 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன.
    • சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களது திறமையை வளர்ப்பதற்காக 6 வகையான டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இதன் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் சென்னை மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கம் புலி கிரிக்கெட் கிளப்-கிராண்ட் பிரிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கிராண்ட் பிரிக்ஸ் அணி, சிங்கம் புலி கிளப் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவர்களில் 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராம்குமார் 55 ரன்னும், நவீன் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிங்கம் புலி கிளப் தரப்பில் ஜெப செல்வின் 4 விக்கெட்டும், சந்தான சேகர், தர்ஷன் தலா 2 விக்கெட்டும், ராஜலிங்கம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து ஆடிய சந்தான சேகர் தலைமையிலான சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஜோபின் ராஜ் 47 ரன்னும், ஆனந்த் 31 ரன்னும், திவாகர் 30 ரன்னும் சேர்த்தனர். தனிஷ் குமார் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கிராண்ட் பிரிக்ஸ் கிளப் தரப்பில் குமரேசன் 3 விக்கெட்டும், நவீன் 2 விக்கெட்டும், கிருஷ்ண குமார், அர்விந்த் சாமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். லீக் முடிவில் இந்த டிவிசனில் அனைத்து (11) ஆட்டங்களிலும் வெற்றி கண்டு அசத்திய சிங்கம் புலி அணி 44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வி.பி.ராகவன் கேடயத்தை தனதாக்கியது. அத்துடன் சிங்கம் புலி அணி 4-வது டிவிசன் போட்டிக்கு முன்னேறியது.

    • திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர் தேர்வு பழங்கரை, அணைப்புதூர் டீ பப்ளிக் பள்ளியில், வருகிற 25-ந் தேதி நடக்கிறது.இப்போட்டியில் 2003 செப்டம்பர் 1 அன்றோ அல்லது அதன் பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். தங்கள் பெயர், போட்டோ, பிறப்பு மற்றும் முகவரி சான்றிதழ்களுடன் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    அதன்படி 19ல் துவங்கிய பதிவு இன்று மாலை 5மணி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும். கிரிக்கெட் உபகரணங்கள் வெள்ளை நிற உடை அணிந்து வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகியுள்ள நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட ஊதியம் இன்னும் வீரர்களுக்கு வந்து சேரவில்லை.

    உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன. பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்கும் உள்ளாயின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.


    வினோத் ராய்

    இந்த ஊதிய உயர்வையே வீரர்கள் போராடிதான் பெற்றார்கள் என அப்போது கூறப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைப்பதில் குறியாக இருந்தனர்.

    இந்நிலையில், நாளை இந்திய அணி இங்கிலாந்து டூர் செல்ல உள்ளது. சுமார் 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்து 5 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தப்படி இன்னும் ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து இன்று பொறுப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது. எனினும், வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டிக்கு எதிராக பொறுப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டு விவாதிக்க உள்ளனர். பொறுப்பு நிர்வாகிகளின் பொதுக்குழுவில் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை எனில், நிர்வாக கமிட்டி ஒப்புதல் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×